Saturday, September 25, 2010

கோவை நகர் தேவியம்மா





தண்டுமாரியம்மன் பக்தி பாடல்


Get this widget | Track details | eSnips Social DNA



ஈச்சனாரி ஸ்ரீ விநாயக சரணம்
ஈச்சனாரி ஸ்ரீ விநாயக நீயே துணை

சாமியே சரணம் சாமியே சரணம்
தேவி சரணம் சாமி சரணம் சாமி சரணம்
சாமியே சரணம் சாமியே சரணம்
தேவி சரணம் சாமி சரணம் சாமி சரணம்

மாரியம்மா ஓம் சக்தி
தேவியம்மா ஓம் சக்தி
கோவை தாயே ஓம் சக்தி
தண்டுமாரி ஓம் சக்தி

அம்மா தண்டு மாரியம்மா
கோவை நகர் தேவியம்மா
ஆதி சக்தி தேவி உன்னை தேடி வந்தோமே
உன் அருள் நாடி வந்தோமே

கூடி வந்தோமே உன் புகழ் பாடி வந்தோமே

அம்மா நீயே நம்மாளே சந்தோசமே என் நாளூம்
பூசையிலே படையிலிட நேரில் வந்தோமே
உன்னிடம் ஓடி வந்தோமே

காண வந்தோமே உன் அருள் ஞானம் கொண்டோமே

சித்தம் நிலைக்குது சித்தம் நிலைக்குது உனது கோலத்தில்
சிந்தை தெளியுது சிந்தை தெளியுது உனது பார்வையில்

பக்தி திறக்குது பக்தி திறக்குது உனது வாசலில்
சக்தி பெருகுது சக்தி பெருகுது உனது கோவிலில்

அம்மா தண்டு மாரியம்மா
கோவை நகர் தேவியம்மா
ஆதி சக்தி தேவி உன்னை தேடி வந்தோமே
உன் அருள் நாடி வந்தோமே

கூடி வந்தோமே உன் புகழ் பாடி வந்தோமே

பூச்சாட்டில் விழுகின்ற பூ மகளே
உன் புன்னகையில் மயங்காது பார் உலகே
ஆசாற்றி பணிகின்றோம் மா மகளே
உன் பாதத்தில் வைக்கின்றோம் வா மகளே
அக்ணிச்சாட்டின் அலங்காரமே
ஆனந்தமே அணல் மோகமே
அருள் ஜோதியே ஆதாரமே
ஆராதிப்போம் உன் பாதமே
மும்முனை கம்பத்திலே சுடர் பொங்க வருபவளே
முகூர்த்த நாளிலே தண்டுமாரியுமானவளே
சித்திரை திங்கள் வெள்ளிக்கிழமை உனது கோவிலில்
வந்த சுடரில் மெய் சிலிர்க்குது உனது கோலத்தில்

பக்தி திறக்குது பக்தி திறக்குது உனது வாசலில்
சக்தி பெருகுது சக்தி பெருகுது உனது கோவிலில்

அம்மா தண்டு மாரியம்மா
கோவை நகர் தேவியம்மா
ஆதி சக்தி தேவி உன்னை தேடி வந்தோமே
உன் அருள் நாடி வந்தோமே

கூடி வந்தோமே உன் புகழ் பாடி வந்தோமே

வேம்பாடும் காடாளூம் மலை மகளே
பெரும் வீதியிலே கரகாட வருபவளே
தீயேந்தும் அடியார் பின் செல்பவளே
என் தேவைக்கு வழியாதும் சொல்பவளே

மேளத்துடன் தாளத்துடன்
யானை வர வருபவளே
வேலாயியே தண்டு மாரியே
வரம் யாவும் தருபவளே
சக்தி கரம் கொண்டு நீ வரும் சந்தனமாளிகையில்
பக்தி திருமணம் கை கொள்ளும் கோவையின் தேவியே
யாவும் நடந்திடும் இது மடிந்திடும் உனது ஆசையில்
ஞானம் பிறந்திடும் அல்லி மெலிந்திடும் உனது பூசையில்

பக்தி திறக்குது பக்தி திறக்குது உனது வாசலில்
சக்தி பெருகுது சக்தி பெருகுது உனது கோவிலில்

அம்மா தண்டு மாரியம்மா
கோவை நகர் தேவியம்மா
ஆதி சக்தி தேவி உன்னை தேடி வந்தோமே
உன் அருள் நாடி வந்தோமே

கூடி வந்தோமே உன் புகழ் பாடி வந்தோமே

அம்மா நீயே நம்மாளே சந்தோசமே என் நாளூம்
பூசையிலே படையிலிட நேரில் வந்தோமே
உன்னிடம் ஓடி வந்தோமே

காண வந்தோமே உன் அருள் ஞானம் கொண்டோமே

சித்தம் நிலைக்குது சித்தம் நிலைக்குது உனது கோலத்தில்
சிந்தை தெளியுது சிந்தை தெளியுது உனது பார்வையில்

பக்தி திறக்குது பக்தி திறக்குது உனது வாசலில்
சக்தி பெருகுது சக்தி பெருகுது உனது கோவிலில்

சித்தம் நிலைக்குது சித்தம் நிலைக்குது உனது கோலத்தில்
சிந்தை தெளியுது சிந்தை தெளியுது உனது பார்வையில்

பக்தி திறக்குது பக்தி திறக்குது உனது வாசலில்
சக்தி பெருகுது சக்தி பெருகுது உனது கோவிலில்

Saturday, August 14, 2010

சிவமயமாக தெரிகிறதே...சிந்தையில்...



பாடல்        : சிவமயமாக தெரிகிறதே...சிந்தையில்...
பாடியவர் திரு.S.P.பாலசுப்ரமணியம்.
வெளியீடு சுபம் ஆடியோ விஷன்.








பாலுஜியின் குரலில் அந்த சிவனே எனக்கு ஒரு மயமாகத் தெரிகிறார்.....
குரலில் அப்படி ஒரு உச்சரிப்பு..... 


//  சிவ லீலை செய்யாமல்..சிறுஏனை ஆட்கொள்ள...
சிறுதேனும் தயவோடு அருள்வாயப்பா...  //


இந்த வரிகளில் நம் அணைவரையும் அந்த சிவனிடத்தில் கொண்டி போய் சேர்த்து விடுகிறார் நம் பாலுஜி....





ஐந்தான முகம் எதிரில் அருள் பொழியுதே...
அணலான மலை காண ...மணம் குளிருதே...


சிவமயமாக தெரிகிறதே...சிந்தையில் சிவயோகம் வருகிறதே...
சிவமயமாக தெரிகிறதே...சிந்தையில் சிவயோகம் வருகிறதே...
புவணங்கள் ஆளும் அண்ணாமலையே...
புவணங்கள் ஆளும் அண்ணாமலையே...
எனது விழிகளில் காணும் பொழுதிலே...மாறிடுதே..மணம் ஊறிடுதே...
அண்ணாமலையானே...எங்கள் அன்பில் கலந்தோனே...
உண்ணாமுலை நாதா...எங்கள் உள்ளம் நிறைந்த்தோனே...
அண்ணாமலையானே...எங்கள் அன்பில் கலந்தோனே...
உண்ணாமுலை நாதா...எங்கள் உள்ளம் நிறைந்த்தோனே...
சிவமயமாக தெரிகிறதே...சிந்தையில் சிவயோகம் வருகிறதே...சிந்தையில் சிவயோகம் வருகிறதே...


யுகம் நாண்கு தாண்டியே...முகம் வேறு காட்டியே...
யகம் யாவும் ஆள்கின்ற...அருணாச்சலா...
யுகம் நாண்கு தாண்டியே...முகம் வேறு காட்டியே...
யகம் யாவும் ஆள்கின்ற...அருணாச்சலா...
சத்தியம் நீதான்...சகலமும் நீதான்...
நித்தியம் என்னில்... நிலைப்பவன் நீதான்...
அருணாச்சலா...உனை நாடினேன்...
அருணாச்சலா...உனை நாடினேன்...
சிவ லீலை செய்யாமல்..சிறுஏனை ஆட்கொள்ள...
சிறுதேனும் தயவோடு அருள்வாயப்பா...
சிறுதேனும் தயவோடு அருள்வாயப்பா...
அண்ணாமலையானே...எங்கள் அன்பில் கலந்தோனே...
உண்ணாமுலை நாதா...எங்கள் உள்ளம் நிறைந்த்தோனே...
அண்ணாமலையானே...எங்கள் அன்பில் கலந்தோனே...
உண்ணாமுலை நாதா...எங்கள் உள்ளம் நிறைந்த்தோனே...
சிவமயமாக தெரிகிறதே...சிந்தையில் சிவயோகம் வருகிறதே...சிந்தையில் சிவயோகம் வருகிறதே...


முடி மீது தீபமாய்...மடி மீது ஜோதியாய்...
அடிவாரம் வெம்மையாய்... உணை காண்கிறேன்...
முடி மீது தீபமாய்...மடி மீது ஜோதியாய்...
அடிவாரம் வெம்மையாய்... உணை காண்கிறேன்...
தீயெனும் லிங்கம்...ஜோதியில் தங்கும்...
பாய்ந்திடும் சுடராய்...வான்வெளி தொங்கும்...
அருணாச்சலா...உன் கோலமே...
அருணாச்சலா...உன் கோலமே...
மனம் காண வர வேண்டும்...தினந்தோறும் வரம் வேண்டும்...
மலையான நாதனே அருள்வாயப்பா...
மலையான நாதனே அருள்வாயப்பா...
அண்ணாமலையானே...எங்கள் அன்பில் கலந்தோனே...
உண்ணாமுலை நாதா...எங்கள் உள்ளம் நிறைந்த்தோனே...
அண்ணாமலையானே...எங்கள் அன்பில் கலந்தோனே...
உண்ணாமுலை நாதா...எங்கள் உள்ளம் நிறைந்த்தோனே...
சிவமயமாக தெரிகிறதே...சிந்தையில் சிவயோகம் வருகிறதே...
சிவமயமாக தெரிகிறதே...சிந்தையில் சிவயோகம் வருகிறதே...
புவணங்கள் ஆளும் அண்ணாமலையே...
புவணங்கள் ஆளும் அண்ணாமலையே...
எனது விழிகளில் காணும் பொழுதிலே...மாறிடுதே..மணம் ஊறிடுதே...
அண்ணாமலையானே...எங்கள் அன்பில் கலந்தோனே...
உண்ணாமுலை நாதா...எங்கள் உள்ளம் நிறைந்த்தோனே...
அண்ணாமலையானே...எங்கள் அன்பில் கலந்தோனே...
உண்ணாமுலை நாதா...எங்கள் உள்ளம் நிறைந்த்தோனே...
அண்ணாமலையானே...எங்கள் அன்பில் கலந்தோனே...
உண்ணாமுலை நாதா...எங்கள் உள்ளம் நிறைந்த்தோனே...






Wednesday, June 16, 2010

ஈச்சனாரி சந்நிதியில் நான் நின்றேன்




ஆல்பம்: ஈச்சனாரி - திவ்யதரிசனம்

இனிமையான குரலில் ஈச்சனாரி விநாயகரின் புகழ் பாடலை கேட்டு மகிழுங்கள். எல்லாம் வல்ல கஜநாதன் உங்களுக்கும் அருள் புரியட்டும்.

மேலும் விபரங்களுக்கு:
திரு.ஏ.சேகர் (பாடகர்)
சேகர் செண்டர் மற்றும் இசை சேவை, கோவை
மின்னஞ்சல் முகவரி:asekercbe@yahoo.com

Get this widget | Track details | eSnips Social DNA



கோவையிலே ஈச்சனாரி கோவிலிலே அமர்ந்தவனே
குன்றாக எழுந்தருளி குலம் காக்கும் கணபதியே
ஈடு காயை போட்டு உடைத்து ஈசன் உன்னை நாடுகின்றேன்
இகசுகத்தை இன்மைக்கும் மறுமைக்கும் தாருமய்யா
எந்த நாளூம் உன்னைப் பணியும் பாக்கியத்தை தாருமய்யா
ஈச்சானாரி கண்பதியே..

ஈச்சனாரி சந்நிதியில் நான் நின்றேன்
ஈச்சனாரி சந்நிதியில் நான் நின்றேன்
எந்தன் இறைவா கணபதியே உன்னைக் கண்டேன்
இறைவா கணபதியே உன்னைக் கண்டேன்
என்னை ஆடவைத்து ஆடுகின்ற ஐங்கரனே
மேல கற்பகமே கண் மலராய் உன்னை பணிகின்றேன்
ஈச்சனாரி சந்நிதியில் நான் நின்றேன்

தந்தையாக வீற்றிருக்கும் தாயும் நீதானே என்னை
தாயுமாக அரவணைக்கும் தந்தை நீதானே
தந்தையாக வீற்றிருக்கும் தாயும் நீதானே
தாயுமாக அரவணைக்கும் தந்தை நீதானே

ஈசன் வந்து நின்ற களம் வாசம் கொண்ட வேலவனே
தேடி வந்து நின்ற தளம் கோயில் கண்ட கோமகனே
தினம் தினம் உன்னை கண்டால் கூட
காணும் ஆவல் சற்றும் குறையாதே
ஈச்சனாரி சந்நிதியில் நான் நின்றேன்
எந்தன் இறைவா கணபதியே உன்னைக் கண்டேன்
ஈச்சனாரி சந்நிதியில் நான் நின்றேன்

ஏட்டினிலே எழுதிவைத்த பாட்டு உனக்கு போதலையோ
வேதம் கண்ட கணநாதனே
என்ன சொல்லி புரியலையோ எந்தன் மொழி தெரியலையோ
ஈச்சனாரி கஜராஜனே
இன்னும் என்ன மனச்சலனம் ஏனிந்த பெரும் தயக்கம்
என்னை ஆளவந்த திருக்கோயில் கொண்ட ஐயன் நீதானே
மூசிகன் ஏறிடும் உத்தமி அழகே முதலே கணபதியே
யாசகம் ஏற்றிடும் என் மனப்பாத்திரம் எங்கே உன் கருணை
ஒற்றை அருகம் புல்லை தந்த போதினில்
உள்ளம் குறைகள் யாவும் நீக்கும் நாயகன்
என்னைப் பொருளாய் ஏற்றிடும் காலம்
கணபதி நாதா இன்னும் வரவில்லையோ
கணநாதா....... கண் பாராய்
மனம் போதும் விடை தாராய்.. விநாயகனே

ஏழைக்கு இறங்கும் ஈச்சனாரி கருணைக்கடலே
என்னைப்பாராய்..

ஈச்சனாரி சந்நிதியில் நான் நின்றேன்
எந்தன் இறைவா கணபதியே உன்னைக் கண்டேன்
இறைவா கணபதியே உன்னைக் கண்டேன்
என்னை ஆடவைத்து ஆடுகின்ற ஐங்கரனே
மேல கற்பகமே கண் மலராய் உன்னை பணிகின்றேன்
ஈச்சனாரி சந்நிதியில் நான் நின்றேன்
எந்தன் இறைவா கணபதியே உன்னைக் கண்டேன்
எந்தன் இறைவா கணபதியே உன்னைக் கண்டேன்

Monday, December 14, 2009

ஆனந்த ரூபன் - ஐயப்பன் பக்தி பாடல் தொகுப்பு



டிசம்பர் மாத குளிரில் சபரிமலைக்கு மாலைபோட்டு விரதம் இருந்து ஐயப்பனை தரிசிக்கும் பக்தர்களி அனைவருக்கும் பாலுஜி பாடீய இந்த ஒலித்தொகுப்பு மனதுக்கு இதமளிக்கும். ஆனந்தரூபன் என்ற தலைப்பில் வந்த ஒலித்தொகுப்பை பலமுறை பதிவேற்றுங்கள் என்று அன்பு வேண்டுகோள் விடுத்த அமெரிக்காவில் வசிக்கும் எனது அருமை அன்பர் திரு.கல்யான்ராம் அவர்களூக்கு நன்றியை தெரிவித்துக்கொளிகிறேன்.

சபரிமலை செல்லும் அனைத்து பக்தர்களூக்கும் வாழ்த்துக்கள்.

ஆனந்த ரூபன் - ஐயப்பன் பக்தி பாடல் தொகுப்பு -1

1.பேர் சூட்டூவோம் அய்யப்பா ஆடுகின்றோம்
2.கார்த்திகை மாதம் மாலை அணிந்து
3.அம்மா மாளிகை
4.சபரி சபரியிலே கற்பூர ஜோதி
5.பிள்ளையை

Get this widget | Track details | eSnips Social DNA


ஆனந்த ரூபன் - ஐயப்பன் பக்தி பாடல் தொகுப்பு -2

1.சந்தனம் மனப்பது
2.தள்ளாடி தள்ளாடி நடக்கிறேன்
3.ஆனந்த ரூபன்
4.காடுமலை சரண் புகுந்தோம்
5.ஒன்றாம் திருபடி சரணமய்யப்பா

Get this widget | Track details | eSnips Social DNA

Monday, September 21, 2009

ரம்ஜான் நல்வாழ்த்துக்கள்




இஸ்மாலிய சகோதரர்கள் அனைவருக்கும் ரம்ஜான் நல்வாழ்த்துக்கள் >> கலீமாவின் அல்லவின் பெயரைச்சொல்லி பாடல் டாக்டர் பாலுஜியின் அமைதியான குரலில் கேட்டு மகிழுங்கள். இந்த ஒலிகோப்பை எனக்கு அனுப்பிவைத்த பாலுஜியின் தீவிர ரசிகர் திரு.ஆர்,ஜி.நாராயணன், பெங்களூரூ அவர்களுக்கு நன்றி. இறைவன் அல்லா எல்லா அருளும் அவர் குடும்பத்திற்க்கு வழங்கட்டும்.

குறிப்பு: வரிகள் பின்னர் சேர்க்கப்படும்>> கோவை ரவி

Get this widget | Track details | eSnips Social DNA

Monday, December 22, 2008

காலமெல்லாம் பாடிடுவேன்



நமது பாலுஜி மயக்கம் என்ற படத்தில் ஓர் அருமையான இனிமையான் மெலோடி பாடல் தந்திருக்கிறார். இந்த கிறிஸ்துமஸ் நன்பர்களூக்காக ஸ்பெஷலாக இந்த பாடல். கேட்டு பாருங்க மெழுகாக உருகிடுவீங்க..

அனைவருக்கும் கிறிஸ்துமஸ் நல்வாழ்த்துக்கள்.

படம்: மயக்கம்
பாடியவர்: எஸ்.பி.பி

Get this widget | Track details | eSnips Social DNA


காலமெல்லாம் பாடிடுவேன்
கர்த்தர் ஏசு அன்புதனை
ஞாலமெல்லாம் சொல்லிடுவேன்
நன்றியுடன் உண்மைகளை

காலமெல்லாம் பாடிடுவேன்
கர்த்தர் ஏசு அன்புதனை
ஞாலமெல்லாம் சொல்லிடுவேன்
நன்றியுடன் உண்மைகளை

காலமெல்லாம் பாடிடுவேன்
கர்த்தர் ஏசு அன்புதனை
ஞாலமெல்லாம் சொல்லிடுவேன்
நன்றியுடன் உண்மைகளை

இன்பமெல்லாம் எனக்கு என்றே
தன்னலமாய் வாழ்ந்திருந்தேன்
இன்பமெல்லாம் எனக்கு என்றே
தன்னலமாய் வாழ்ந்திருந்தேன்

தன்னுயிரை தந்து என்னை
அன்புள்ளவனாக ஆக்கிவிட்டாய்

தன்னுயிரை தந்து என்னை
அன்புள்ளவனாக ஆக்கிவிட்டாய்
காலமெல்லாம் பாடிடுவேன்
கர்த்தர் ஏசு அன்புதனை
ஞாலமெல்லாம் சொல்லிடுவேன்
நன்றியுடன் உண்மைகளை
காலமெல்லாம் பாடிடுவேன்

கொடுமையாய் இறைவன் என்றேன்
மடமையால் நினைத்திருந்தேன்

கொடுமையாய் இறைவன் என்றேன்
மடமையால் நினைத்திருந்தேன்

கருணையுள்ள ஏசு எந்தன்
கண்களை திறந்துவிட்டாய்
கருணையுள்ள ஏசு எந்தன்
கண்களை திறந்துவிட்டாய்

காலமெல்லாம் பாடிடுவேன்
கர்த்தர் ஏசு அன்புதனை
ஞாலமெல்லாம் சொல்லிடுவேன்
நன்றியுடன் உண்மைகளை
காலமெல்லாம் பாடிடுவேன்

Tuesday, December 9, 2008

ஹர ஹர சிவனே அருணாசலனே



ரொம்ப நாட்கள் கழித்து இந்த தளத்தில் பாலுஜியின் பக்திப்பாடலை பதிகின்றேன். மனதுக்கு இதமாக இருக்கிறது. இனி வாரம் ஒரு முறையாவது ஒரு பாடல் பதியவேண்டும். மேலும், என்னை இந்த தளத்தில் மீண்டும் பதிய தூண்டியவர் பாலுஜியின் தீவிர ரசிகர் எனது நண்பர் திரு. செல்வா அவர்கள் ஒரு வருடமாக இந்த பாடலின் வரிகள் வேண்டும் என்று மின்னஞ்சலில் கேட்டுக்கொண்டே இருந்தார் நான் இந்த ஒலிக்கோப்பை எடுத்து வைத்து கேட்டு பாடல் வரிகள் தட்டச்சு செய்து அனுப்பலாம் அனுப்பலாம் அனுபபலாம் என்று முயன்று முயன்று வேலை பளுவால் பலதடவை தள்ளீப்போய்கொண்டே இருந்தது. சென்ற வாரம் ஒரே முழு மூச்சுடன் பாடல் கேட்டு எழுதினேன் (தவறுகள் இருந்தாலும் தெரிவிக்கலாம்). அவருக்கும் மின்னஞ்சல் செய்து விட்டேன். தற்போது அவருக்கு மகிழ்ச்சியாக இருக்கும் என்று நினைக்கிறேன். இதே ஓம் நமசிவாய பாடல் இதே தளத்தில் மேற்கத்திய இசையில் முன்னமே பதிந்திருக்கேன் அதையும் கேளூங்கள் இதையும் கேளூங்கள். எவ்வளவு வித்தியாசம் என்று. இரண்டு பாடல்களும் நமது பாலுஜிதான் பாடியுள்ளார்.



கார்த்திகை திருவண்ணாமலி தீபதிருநாளில் உண்ணாமலையார் இந்த பாடல் கேட்பவர் அனைவருக்கும் அருள் வழங்கி அவர்கள் வாழ்க்கையில் என்றும் மகிழ்ச்சியுடன் திகழ வேண்டுமென பிரார்த்திக்கிறேன்.



அனைவருக்கும் கார்த்திகை தீபத்திருநாள் வாழ்த்துக்கள்.

Get this widget | Track details | eSnips Social DNA


பாடியவர்: டாக்டர்.எஸ்.பி.பி
இசை:திரு.அர்விந்த்

நமச்சிவாயா நமச்சிவாயா ஓம் நமச்சிவாயா
நமச்சிவாயா நமச்சிவாயா ஓம் நமச்சிவாயா

நமச்சிவாயா நமச்சிவாயா ஓம் நமச்சிவாயா
நமச்சிவாயா நமச்சிவாயா ஓம் நமச்சிவாயா

ஹர ஹர சிவனே அருணாசலனே
அண்ணாமலையே போற்றி
சிவ ஓம் நமச்சிவாயா

சிவ சிவ ஹரனே சோனாச்சலனே
ஹர ஹர சிவனே அருணாசலனே
அண்ணாமலையே போற்றி
ஹர ஓம் நமச்சிவாயா

அணலே நமச்சிவாயம்
அலலே நமச்சிவாயம்
கனலே நமச்சிவாயம்
காற்றே நமச்சிவாயம்

புலியின் தோலை இடையில் அணிந்த
புனிதக்கடலே போற்றி
சிவ ஓம் நமச்சிவாயா

கலியின் தீமை யாவும் நீக்கும்
கருணை கடலேப் போற்றி

ஹர ஓம் நமச்சிவாயா
ஹர ஓம் நமச்சிவாயா

புனலே நமச்சிவாயம் பொருளே நமச்சிவாயம்
புகழே நமச்சிவாயம் புனிதம் நமச்சிவாயம்

நமச்சிவாயா நமச்சிவாயா ஓம் நமச்சிவாயா,
நமச்சிவாயா நமச்சிவாயா ஓம் நமச்சிவாயா
----------------------------------------
நமச்சிவாயா நமச்சிவாயா ஓம் நமச்சிவாயா,
நமச்சிவாயா நமச்சிவாயா ஓம் நமச்சிவாயா

சிவனார் கங்கை கரையில் அமர்ந்த
சீதழே ஒளியே போற்றி
சிவ ஓம் நமச்சிவாயா

தவமே செய்யும் தபோவனத்தில்
ஜோதி லிங்கனே போற்றி
ஹர ஓம் நமச்சிவாயா

வேதம் நமச்சிவாயம் நாதம் நமச்சிவாயம்
பூதம் நமச்சிவாயம் கோதம் நமச்சிவாயம்

மணிப்பூர் அகமாய் சூட்சுமம் காட்டும்
அருணாச்சாலனே போற்றி
சிவ ஓம் நமச்சிவாயா

மங்கள சிவனாய் தங்கிடும் வடிவே
செங்கனல வண்ணா போற்றி
ஹர ஓம் நமச்சிவாயா

அன்பே நமச்சிவாயம் அணியே நமச்சிவாயம்
பண்பே நமச்சிவாயம் பரிவே நமச்சிவாயம்

நமச்சிவாயா நமச்சிவாயா ஓம் நமச்சிவாயா,
நமச்சிவாயா நமச்சிவாயா ஓம் நமச்சிவாயா
-------------------------------------------
நமச்சிவாயா நமச்சிவாயா ஓம் நமச்சிவாயா,
நமச்சிவாயா நமச்சிவாயா ஓம் நமச்சிவாயா

நினைத்த உடனே முக்தியை தந்திடும்
அண்ணாமலையே போற்றி
சிவ ஓம் நமச்சிவாயா

நிம்மதி வாழ்வில் நித்தமும் தந்திட
சன்னிதி கொண்டாய் போற்றி
ஹர ஓம் நமச்சிவாயா

அருளே நமச்சிவாயம் அழகே நமச்சிவாயம்
இருளே நமச்சிவாயம் இனிமை நமச்சிவாயம்

சித்தர் பூமியாய் சிவலயம் காட்டும்
அண்ணாமலையே போற்றி
சிவ ஓம் நமச்சிவாயா

பக்தர் நெஞ்சினை சிவமயாமாக்கும்
சிவபெருமானே போற்றி
ஹர ஓம் நமச்சிவாயா

குருவே நமச்சிவாயம் உயிரே நமச்சிவாயம்
அருவே நமச்சிவாயம் அகிலம் நமச்சிவாயம்

நமச்சிவாயா நமச்சிவாயா ஓம் நமச்சிவாயா,
நமச்சிவாயா நமச்சிவாயா ஓம் நமச்சிவாயா
---------------------------------------------
நமச்சிவாயா நமச்சிவாயா ஓம் நமச்சிவாயா,
நமச்சிவாயா நமச்சிவாயா ஓம் நமச்சிவாயா

அன்னை உமைக்கு இடமாய் உடலில்
ஆலயம் தந்தாய் போற்றி
சிவ ஓம் நமச்சிவாயா

சொன்ன வண்ணமே
செய்யும் நாதனே
சோனாசலனே போற்றி
ஹர ஓம் நமச்சிவாயா

ஆதியும் நமச்சிவாயம் அந்தமும் நமச்சிவாயம்
ஜோதியும் நமச்சிவாயம் சுந்தரம் நமச்சிவாயம்

சூரியன் சந்திரன் அஷ்டவ சுட்கன்
ஒதி நாடும் நாதா போற்றி
சிவ ஓம் நமச்சிவாய

சுந்தரி உண்ணாமலையுடன் திகழும்
அண்ணாமலையே போற்றி
ஹர ஓம் நமச்சிவாயா

சம்பவம் நமச்சிவாயம் சத்குரு நமச்சிவாயம்
அம்பிகை நமச்சிவாயம் ஆகமம் நமச்சிவாயம்

நமச்சிவாயா நமச்சிவாயா ஓம் நமச்சிவாயா,
நமச்சிவாயா நமச்சிவாயா ஓம் நமச்சிவாயா
---------------------------------------------------------
நமச்சிவாயா நமச்சிவாயா ஓம் நமச்சிவாயா,
நமச்சிவாயா நமச்சிவாயா ஓம் நமச்சிவாயா

எட்டா நிலையில் நெட்டாய் எழுந்த
வேதலிங்கமே போற்றி
சிவ ஓம் நமச்சிவாயா

பற்றாய் இருந்து பற்றும் எவருக்கும்
பாதை காட்டுவாய் போற்றி
ஹர ஓம் நமச்சிவாயா

கதிரும் நமச்சிவாயம் சுடரும் நமச்சிவாயம்
புதிரும் நமச்சிவாயம் புவனம் நமச்சிவாயம்

ஜோதி பிழம்பின் சுடரில் கனிந்த
அண்ணாமலையே போற்றி
சிவ ஓம் நமச்சிவாய

ஆதி பிழம்பில் ஆலயம் கொண்ட
அடி அண்ணாமலை போற்றி
ஹர ஓம் நமச்சிவாயா

குளிரே நமச்சிவாயம் முகிலும் நமச்சிவாயம்
பனியும் நமச்சிவாயம் பருவம் நமச்சிவாயம்

நமச்சிவாயா நமச்சிவாயா ஓம் நமச்சிவாயா,
நமச்சிவாயா நமச்சிவாயா ஓம் நமச்சிவாயா
------------------------------------------
நமச்சிவாயா நமச்சிவாயா ஓம் நமச்சிவாயா,
நமச்சிவாயா நமச்சிவாயா ஓம் நமச்சிவாயா

குமரகுருவான குகனே பனிந்த
குருலிங்கேசா போற்றி
சிவ ஓம் நமச்சிவாயா

இமய மலைமீது வாசம் புரியும்
அமரோர் அரசே போற்றி
ஹர ஓம் நமச்சிவாயா

மண்ணும் நமச்சிவாயம் மரமும் நமச்சிவாயம்
விண்ணும் நமச்சிவாயம் விளைவும் நமச்சிவாயம்

மணிமலையாகிய மந்திர மலையில்
சுந்தரமானாய் போற்றி
சிவ ஓம் நமச்சிவாய

அணியா பரணம் பலவகை சூடும்
அருணாச்சலனே போற்றி
ஹர ஓம் நமச்சிவாயா

மலையே நமச்சிவாயம் மலரே நமச்சிவாயம்
சிலையே நமச்சிவாயம் சிகரம் நமச்சிவாயம்

நமச்சிவாயா நமச்சிவாயா ஓம் நமச்சிவாயா,
நமச்சிவாயா நமச்சிவாயா ஓம் நமச்சிவாயா
----------------------------------------
நமச்சிவாயா நமச்சிவாயா ஓம் நமச்சிவாயா,
நமச்சிவாயா நமச்சிவாயா ஓம் நமச்சிவாயா

குமரகுருவான குகனே பனிந்த
குருலிங்கேசா போற்றி
சிவ ஓம் நமச்சிவாயா

இமய மலைமீது வாசம் புரியும்
அமரோர் அரசே போற்றி
ஹர ஓம் நமச்சிவாயா

மண்ணும் நமச்சிவாயம் மரமும் நமச்சிவாயம்
விண்ணும் நமச்சிவாயம் விளைவும் நமச்சிவாயம்

மணிமலையாகிய மந்திர மலையில்
சுந்தரமானாய் போற்றி
சிவ ஓம் நமச்சிவாய

அணியா பரணம் பலவகை சூடும்
அருணாச்சலனே போற்றி
ஹர ஓம் நமச்சிவாயா

மலையே நமச்சிவாயம் மலரே நமச்சிவாயம்
சிலையே நமச்சிவாயம் சிகரம் நமச்சிவாயம்

நமச்சிவாயா நமச்சிவாயா ஓம் நமச்சிவாயா,
நமச்சிவாயா நமச்சிவாயா ஓம் நமச்சிவாயா
----------------------------------------
நமச்சிவாயா நமச்சிவாயா ஓம் நமச்சிவாயா,
நமச்சிவாயா நமச்சிவாயா ஓம் நமச்சிவாயா

கம்பதிலையான் குகனை கண்ணில்
படைத்த சிவனே போற்றி
சிவ ஓம் நமச்சிவாயா

நம்பிய நெஞ்சில் நலமே அளிக்கும்
நாகா பரணா போற்றி
ஹர ஓம் நமச்சிவாயா

திருவே நமச்சிவாயம் தெளிவே நமச்சிவாயம்
கருவே நமச்சிவாயம் கனிவே நமச்சிவாயம்

அருணை நகர சிகரம் விரிந்த
அக்னிலிங்கனே போற்றி
சிவ ஓம் நமச்சிவாய

கருணை வேண்டி காலடி பணிந்து
சரணம் செய்தோம் போற்றி
ஹர ஓம் நமச்சிவாயா

பெண்ணும் நமச்சிவாயம் ஆணும் நமச்சிவாயம்
என்னம் நமச்சிவாயம் ஏகம் நமச்சிவாயம்

நமச்சிவாயா நமச்சிவாயா ஓம் நமச்சிவாயா,
நமச்சிவாயா நமச்சிவாயா ஓம் நமச்சிவாயா
----------------------------------------
நமச்சிவாயா நமச்சிவாயா ஓம் நமச்சிவாயா,
நமச்சிவாயா நமச்சிவாயா ஓம் நமச்சிவாயா

மூன்று மூர்த்திகளின் வடிவாய் எழுந்த
முக்கண் அரசே போற்றி
சிவ ஓம் நமச்சிவாயா

தோன்றி வளர்ந்து துலங்கிடும் கதிரே
சூல நாதனே போற்றி
ஹர ஓம் நமச்சிவாயா

ஒலியே நமச்சிவாயம் உணர்வே நமச்சிவாயம்
வெளியே நமச்சிவாயம் விசையே நமச்சிவாயம்

மோன வடிவாகி மோஹனம் காட்டும்
மூர்த்திலிங்கனே போற்றி
சிவ ஓம் நமச்சிவாய

ஞானம் வழங்கி நர்கதி அளீக்கும்
நந்தி வாகனா போற்றி
ஹர ஓம் நமச்சிவாயா

நாகம் நமச்சிவாயம் ரகசியம் நமச்சிவாயம்
யோகம் நமச்சிவாயம் யாகம் நமச்சிவாயம்

நமச்சிவாயா நமச்சிவாயா ஓம் நமச்சிவாயா,
நமச்சிவாயா நமச்சிவாயா ஓம் நமச்சிவாயா
----------------------------------------
நமச்சிவாயா நமச்சிவாயா ஓம் நமச்சிவாயா,
நமச்சிவாயா நமச்சிவாயா ஓம் நமச்சிவாயா

அர்த்தநாரியாய் வித்தகம் செய்யும்
அருணாச்சலனே போற்றி
சிவ ஓம் நமச்சிவாயா

நர்த்தன தாண்டவ நாடகம் ஆடும்
ராக நாதனே போற்றி
ஹர ஓம் நமச்சிவாயா

அதிர்வும் நமச்சிவாயம் அசைவும் நமச்சிவாயம்
நிலையும் நமச்சிவாயம் நிறைவும் நமச்சிவாயம்

ரமண முனிக்கு ரகசியம் சொன்ன
ராஜலிங்கனே போற்றி
சிவ ஓம் நமச்சிவாய

இமையோர் தலைவன் பதவியும் வழங்கும்
ஈசமகேஷா போற்றி
ஹர ஓம் நமச்சிவாயா

கோடை நமச்சிவாயம் கொண்டலும் நமச்சிவாயம்
வாடையும் நமச்சிவாயம் தென்றலும் நமச்சிவாயம்

நமச்சிவாயா நமச்சிவாயா ஓம் நமச்சிவாயா,
நமச்சிவாயா நமச்சிவாயா ஓம் நமச்சிவாயா
----------------------------------------
நமச்சிவாயா நமச்சிவாயா ஓம் நமச்சிவாயா,
நமச்சிவாயா நமச்சிவாயா ஓம் நமச்சிவாயா

பரணி தீபமாய தரணியில் ஒளிரும்
பரமேஷ்வரனே போற்றி
சிவ ஓம் நமச்சிவாயா

ஹரஹர என்றால் வரமழை பொழியும்
ஆதிலிங்கனே போற்றி
ஹர ஓம் நமச்சிவாயா

சித்தியும் நமச்சிவாயம் முக்தியும் நமச்சிவாயம்
பக்தியும் நமச்சிவாயம் சக்தியும் நமச்சிவாயம்

கார்த்திகை திருநாள் உற்சவம் காணும்
தீபச்சுடரே போற்றி
சிவ ஓம் நமச்சிவாய

தீர்த்தம் யாவிலும் நீராடிடுவாய்
அருணாச்சலனே போற்றி
ஹர ஓம் நமச்சிவாயா

நிலவே நமச்சிவாயம் நிஜமே நமச்சிவாயம்
கலையே நமச்சிவாயம் நினைவே நமச்சிவாயம்

நமச்சிவாயா நமச்சிவாயா ஓம் நமச்சிவாயா,
நமச்சிவாயா நமச்சிவாயா ஓம் நமச்சிவாயா
----------------------------------------
நமச்சிவாயா நமச்சிவாயா ஓம் நமச்சிவாயா,
நமச்சிவாயா நமச்சிவாயா ஓம் நமச்சிவாயா

சுற்றிட சுற்றிட வெற்றிகள் வழங்கும்
சோனாலச்சனே போற்றி
சிவ ஓம் நமச்சிவாயா

பொற்ச்சபைதன்னில் அற்புத நடனம்
புரியும் பரமே போற்றி
ஹர ஓம் நமச்சிவாயா

லிங்கம் நமச்சிவாயம் லீலை நமச்சிவாயம்
கங்கை நமச்சிவாயம் கருணை நமச்சிவாயம்

சோனை நதி தீரம் கோயில் கொண்ட
அருணாசலனே போற்றி
சிவ ஓம் நமச்சிவாய

வானவெளிதனை கோபுரம் ஆக்கி
மலையில் நிறைந்தாய் போற்றி
ஹர ஓம் நமச்சிவாயா

செல்வம் நமச்சிவாயம் சீரும் நமச்சிவாயம்
வில்வம் நமச்சிவாயம் வேஷம் நமச்சிவாயம்

நமச்சிவாயா நமச்சிவாயா ஓம் நமச்சிவாயா,
நமச்சிவாயா நமச்சிவாயா ஓம் நமச்சிவாயா
----------------------------------------
நமச்சிவாயா நமச்சிவாயா ஓம் நமச்சிவாயா,
நமச்சிவாயா நமச்சிவாயா ஓம் நமச்சிவாயா

ஆதிரை அழகா ஆவுடை மேலே
அமரும் தலைவா போற்றி
சிவ ஓம் நமச்சிவாயா

வேதியர் போற்றும் வென்சடை இறைவா
வேதப்பொருளே போற்றி
ஹர ஓம் நமச்சிவாயா

முதலும் நமச்சிவாயம் முடிவும் நமச்சிவாயம்
இடையும் நமச்சிவாயம் விடையும் நமச்சிவாயம்

நாகமுடியுடன் யோகம் புரியும்
நாகேஸ்வரனே போற்றி
சிவ ஓம் நமச்சிவாய

வேத நடுவிலே திருநீர் அணியும்
அருனேஷ்வரனே போற்றி
ஹர ஓம் நமச்சிவாயா

அம்மையும் நமச்சிவாயம் அப்பனும் நமச்சிவாயம்
நண்மையும் நமச்சிவாயம் நாதனும் நமச்சிவாயம்

நமச்சிவாயா நமச்சிவாயா ஓம் நமச்சிவாயா,
நமச்சிவாயா நமச்சிவாயா ஓம் நமச்சிவாயா
----------------------------------------
நமச்சிவாயா நமச்சிவாயா ஓம் நமச்சிவாயா,
நமச்சிவாயா நமச்சிவாயா ஓம் நமச்சிவாயா

அடிமுடி இல்லா ஆனந்த வடிவே
அண்ணாமலையே போற்றி
சிவ ஓம் நமச்சிவாயா

அம்மையப்பனாய் அகிலம் காக்கும்
அமுதேஷ்வரனே போற்றி
ஹர ஓம் நமச்சிவாயா

அதுவும் நமச்சிவாயம் இதுவும் நமச்சிவாயம்
எதுவும் நமச்சிவாயம் எதிலும் நமச்சிவாயம்

விடையாம் காளை வாகனம் ஏறி
விண்ணில் வருவாய் போற்றி
சிவ ஓம் நமச்சிவாய

வேண்டிய கணமே என்னிய கணமே
கண்ணில் தெரிவாய் போற்றி
ஹர ஓம் நமச்சிவாயா

சூலம் நமச்சிவாயம் சுகமே நமச்சிவாயம்
நீலம் நமச்சிவாயம் நித்தியம் நமச்சிவாயம்

நமச்சிவாயா நமச்சிவாயா ஓம் நமச்சிவாயா,
நமச்சிவாயா நமச்சிவாயா ஓம் நமச்சிவாயா
----------------------------------------
நமச்சிவாயா நமச்சிவாயா ஓம் நமச்சிவாயா,
நமச்சிவாயா நமச்சிவாயா ஓம் நமச்சிவாயா

பௌர்னமி நாளீல் பிறைநிலவணியும்
மகாதேவனே போற்றி
சிவ ஓம் நமச்சிவாயா

ஒஹவ்சகமாலாய் பிணிகள் தீர்க்கும்
அருணச்சலமே போற்றி
ஹர ஓம் நமச்சிவாயா

தீபம் நமச்சிவாயம் திருவருள் நமச்சிவாயம்
ரூபம் நமச்சிவாயம் ருத்ரம் நமச்சிவாயம்

பனிகைலாயம் தீ வடிவாகிய
அண்ணாமலையே போற்றி
சிவ ஓம் நமச்சிவாய

பனிவடிவாகிய தென்னாடுடையாய்
திருவருளேசா போற்றி
ஹர ஓம் நமச்சிவாயா

எங்கும் நமச்சிவாயம் எல்லாம் நமச்சிவாயம்
எழிலும் நமச்சிவாயம் என்றும் நமச்சிவாயம்

நமச்சிவாயா நமச்சிவாயா ஓம் நமச்சிவாயா,
நமச்சிவாயா நமச்சிவாயா ஓம் நமச்சிவாயா

நமச்சிவாயா நமச்சிவாயா ஓம் நமச்சிவாயா,
நமச்சிவாயா நமச்சிவாயா ஓம் நமச்சிவாயா

நமச்சிவாயா நமச்சிவாயா ஓம் நமச்சிவாயா,
நமச்சிவாயா நமச்சிவாயா ஓம் நமச்சிவாயா
----------------------------------------

ஹைத்ராபாத் சந்திப்பு காட்சிகள்