Friday, September 14, 2007

முந்தி முந்தி நாயகனே



விநாயகர் சதுர்த்தியான இன்று விநாயக கடவுளை வணங்கி அவனருள் பெற்று சுண்டலும், தொந்தி நிறைய கொழுக்கட்டையும் புசித்து மகிழ்ச்சியாக இருங்கள்.

முந்தி முந்தி நாயகனே
மூஞ்சூரு வாகனனே
தொந்தியுள்ள பாலகனே
தூயவரின் சேவகனே

முந்தி முந்தி நாயகனே
மூஞ்சூரு வாகனனே
தொந்தியுள்ள பாலகனே
தூயவரின் சேவகனே

வந்தனம் வந்தனம் கணபதியே
கன்னிமூல கணபதியே
வந்திடு வந்திடு கணபதியே
காவல் நிற்கும் குலபதியே

உன்னை மலைப்போல நம்பியே
அய்யன் மலை ஏறப்போகிறோம்
உன்னை மலைப்போல நம்பியே
அய்யன் மலை ஏறப்போகிறோம்

முந்தி முந்தி நாயகனே
மூஞ்சூரு வாகனனே
தொந்தியுள்ள பாலகனே
தூயவரின் சேவகனே

வந்தனம் வந்தனம் கணபதியே
கன்னிமூல கணபதியே
வந்திடு வந்திடு கணபதியே
காவல் நிற்கும் குலபதியே

அந்தமுள்ள வேலவனே
அரசாளும் தலைமகனே
சொந்தமுள்ள தொண்டருக்கு
தும்பிக்கை தருபவனே

அந்தமுள்ள வேலவனே
அரசாளும் தலைமகனே
சொந்தமுள்ள தொண்டருக்கு
தும்பிக்கை தருபவனே

அங்க நிறம் கருத்தவனே
தங்க மனம் படைத்தவனே
அங்க நிறம் கருத்தவனே
தங்க மனம் படைத்தவனே

கொம்பொடித்து பாட்டெழுதி
குறை தீர்த்த புன்னியனே

முந்தி முந்தி நாயகனே
மூஞ்சூரு வாகனனே
தொந்தியுள்ள பாலகனே
தூயவரின் சேவகனே

வந்தனம் வந்தனம் கணபதியே
கன்னிமூல கணபதியே
வந்திடு வந்திடு கணபதியே
காவல் நிற்கும் குலபதியே

வள்ளி மணவாளனுக்கு
துள்ளி வந்து துணைபுறிந்தாய்
வாக்குடைய அவ்வை அவள்
பாட்டுச்சொல்ல கேட்டிருந்தாய்

வள்ளி மணவாளனுக்கு
துள்ளி வந்து துணைபுறிந்தாய்
வாக்குடைய அவ்வை அவள்
பாட்டுச்சொல்ல கேட்டிருந்தாய்

அள்ளி அவள் பொறி கொடுத்தாள்
உள்ளம் தரும் உமையனே
அள்ளி அவள் பொறி கொடுத்தாள்
உள்ளம் தரும் உமையனே

அள்ள அள்ள குறையாத
வள்ளல் மனம் உடையவனே

முந்தி முந்தி நாயகனே
மூஞ்சூரு வாகனனே
தொந்தியுள்ள பாலகனே
தூயவரின் சேவகனே

முந்தி முந்தி நாயகனே
மூஞ்சூரு வாகனனே
தொந்தியுள்ள பாலகனே
தூயவரின் சேவகனே

வந்தனம் வந்தனம் கணபதியே
கன்னிமூல கணபதியே
வந்திடு வந்திடு கணபதியே
காவல் நிற்கும் குலபதியே

உன்னை மலைப்போல நம்பியே
அய்யன் மலை ஏறப்போகிறோம்
உன்னை மலைப்போல நம்பியே
அய்யன் மலை ஏறப்போகிறோம்

உன்னை மலைப்போல நம்பியே
அய்யன் மலை ஏறப்போகிறோம்

முந்தி முந்தி நாயகனே
மூஞ்சூரு வாகனனே
தொந்தியுள்ள பாலகனே
தூயவரின் சேவகனே

வந்தனம் வந்தனம் கணபதியே
கன்னிமூல கணபதியே
வந்திடு வந்திடு கணபதியே
காவல் நிற்கும் குலபதியே



பள்ளிக்கட்டு
சபரிமலைக்கு
கல்லும் முள்ளூம்
காலுக்கு மெத்தை

பள்ளிக்கட்டு
சபரிமலைக்கு
கல்லும் முள்ளூம்
காலுக்கு மெத்தை

வில்லாளி வீரணே
சரணம் சரணம் ஐயப்பா
வீரமணி கண்டனே
சரணம் சரணம் ஐயப்பா

கற்பூரப் பிரியனே
சரணம் சரணம் ஐயப்பா
காந்தமலை வாசனே
சரணம் சரணம் ஐயப்பா
சரணம் சரணம் ஐயப்பா
சரணம் சரணம் ஐயப்பா

சாமியே சரணம் ஐயப்பா
Get this widget | Share | Track details

Tuesday, September 11, 2007

ராமாஆஆ. ராமாஆஆ.




ராமாபிரான் மீது ஒர் உருக்கமான பாடல் கேளூங்கள். மகிழ்ச்சியுடன் இருங்கள்.

கல் மனம் உருகி கனிவதும் எக்காலம்
அகலாதா இந்த அகளிகையின் சாபம்

கல் மனம் உருகி கனிவதும் எக்காலம்
அகலாதா இந்த அகளிகையின் சாபம்
கல் மனம் உருகி கனிவதும் எக்காலம்
எக்காலம்ம்ம்ம்ம்ம்ம்ம்

வில்லுடன் தோன்றும் வேத ஸ்வரூபம்
வில்லுடன் தோன்றும் வேத ஸ்வரூபம்

விணைகள் அளிக்கும் ஸ்ரீராம நாமம்
விணைகள் அளிக்கும் ஸ்ரீராம நாமம்

யுகம் யுகமாய் தவம் இருந்தது போதும்
யுகம் யுகமாய் தவம் இருந்தது போதும்

விறைந்து வராதா உன் திருபாதம்
விறைந்து வராதா உன் திருபாதம்

அகலாதா இந்த அகளிகையின் சாபம்
கல் மனம் உருகி கனிவதும் எக்காலம்
எக்காலம்ம்ம்ம்ம்ம்ம்ம்
எக்காலம்ம்ம்ம்ம்ம்ம்ம்

அழுவதற்கா இந்த அனுபவ வேஷம்
அழுவதற்கா இந்த அனுபவ வேஷம்

அலைவதற்கா இந்த மானிட தேகம்
அலைவதற்கா இந்த மானிட தேகம்

அழைக்கின்றதே என் ஆத்ம சங்கீதம்
ராமாஆஆஆஆ.. ராமாஆஆஆஆ..
அழைக்கின்றதே என் ஆத்ம சங்கீதம்

மழைப்பொழியாதா மந்திர மேகம்
மழைப்பொழியாதா மந்திர மேகம்

அகலாதா இந்த அகளிகையின் சாபம்
கல் மனம் உருகி கனிவதும் எக்காலம்
எக்காலம்ம்ம்ம்ம்ம்ம்ம்
எக்காலம்ம்ம்ம்ம்ம்ம்ம்

ஜென்மங்கள் ஆயிரம் எடுத்தென்ன லாபம்
ஜென்மங்கள் ஆயிரம் எடுத்தென்ன லாபம்

கர்மங்கள் பந்தங்கள் எத்தனை பாதம்
கர்மங்கள் பந்தங்கள் எத்தனை பாதம்

அன்பெனும் தேரை அழைப்பது கேட்டு
அன்பெனும் தேரை அழைப்பது கேட்டு

திருவடியோகம் சீக்கிரம் காட்டு
திருவடியோகம் சீக்கிரம் காட்டு

கல் மனம் உருகி கனிவதும் எக்காலம்
அகலாதா இந்த அகளிகையின் சாபம்
கல் மனம் உருகி கனிவதும் எக்காலம்
அகலாதா இந்த அகளிகையின் சாபம்
கல் மனம் உருகி கனிவதும் எக்காலம்
எக்காலம்ம்ம்ம்ம்ம்ம்ம்
எக்காலம்ம்ம்ம்ம்ம்ம்ம்

Get this widget | Share | Track details

Friday, September 7, 2007

காலை இளம் கதிரவன் போல்



சென்ற வாரம் கோகுலாஷ்டமி சிறப்பு பதிவாக இந்த தளத்தில் நமது பாலுஜி அவர்கள் பாடிய இரண்டு பக்திப்பாடல்கள் பதிவு செய்தேன். அதை யாகூ குழுவில் நண்பர்களூக்காக சுட்டியை மின்னஞ்சலாக அனுப்பினேன். உண்மையிலே கிருஷ்னன் மீதுபாடிய பக்திப்பாடல் தான் போட வேண்டும் ஆயர்பாடி மாளிகையில் பாடல் ஏற்கெனவே இதே தளத்தில் முன்னமேயே பதிவு செய்து விட்டபடியால் மேலும் கிருஷ்னன் பக்திபாடல் தேட நேரமின்மையால் மற்ற பதிவுகளாக அனுப்பிவைத்தேன். அந்த சுட்டீயைப்பார்த்து நமது குழுவின் உறுப்பினர் திரு.ராஜித், டொர்னோட்டோவில் இருந்து அவரின் அடக்கமுடியா ஆவலாக ஒரு கிருஷ்னன் பாடலை அவரே எனக்கு அனுப்பிவைத்தார். மேலும் அவர் குறிப்பிட்டது கோகுலாஷ்டமி என்று சொல்லிவிட்டு பெருமாள் பாடலையும், சிவாஸ்டகம் பாடலையும் பதிவுசெய்ததை மறைமுகமாக குறிப்பிட்டு பரவாயில்லை பாலுஜி பாடலை எந்த சூழ்நிலையைலும் அவரின் இனிமையான குரலை கேட்கலாம் என்றார். அவர் இப்படி எனக்கு சொன்னது என் மனதினை உறுத்திக்கொண்டு இருந்ததை ஆதராவாக தடவிகொடுத்தது போல் இருந்தது. அவருக்கு என் நன்றி.

இந்த பாடலை இசையமைத்து நமது பாலுஜி அவர்களை வைத்து அவரின் முதல் பதிவாக 1996 ஆம் ஆண்டே பதிவு செய்துள்ளார். அதிக பாடல்கள் பாலுஜியை வைத்து இசையமைத்து ஆல்பங்களாக வெளியிட்டுள்ளார். வியாபார ரீதியாக கேசட்டுகள் வந்தாலும் எத்தனை பேர் இந்த பாடலை கேட்டிருப்பார்கள் என்று எனக்கு தெரியவில்லை. நானே இப்போது தான் முதல் தடவையாக இந்த அழகான கிருஷ்னன் பாடலை கேட்டு அசந்துபோனேன். இதே போல் எத்தனை பாடல்கள் நம் செவிக்கு எட்டாமல் எங்கு எங்கு எந்தெந்த மொழிகளில் வெளியே தெரியாமல் இருக்கின்றனவோ அந்த பாலா(லு)ஜிக்கே வெளிச்சம்.

திரு. ராஜ் சார் போல் அவர்களே முன் வந்து நமக்கு வழங்கினால் தான் தெரிகிறது எத்தனை அற்புதமான மானிக்கங்கள் இருக்கின்றன என்று. திரு.ராஜ் சாரைப்பற்றி நியுயார்க், மற்றும் யு.எஸ். இணைய நண்பர்கள் தெரிந்து இருக்க வாய்ப்பு இருக்கும் என்று நம்புகிறேன். ராஜ் சாரின் தளங்களில் சென்று பாருங்கள் (சுட்டி கீழே கொடுக்கப்பட்டுள்ளது) மெல்லிசை மன்னர் எம்.எஸ்.வி அவர்களின் தளத்தை வைத்துள்ளார், அவரின் இசை குழுவின் தளமும் உள்ளது. மேலும் அறிய பல தகவல்கள் வைத்துள்ளார் நானே சொல்லுவதை விட நீங்களே ஒரு தடவை அவரின் சுட்டிக்கு விஜயம் செய்து அவருக்கு வாழ்த்து சொல்லுங்கள் அவர் மிக்க மகிழ்ச்சி அடைவார். பாலுஜியை வைத்து இன்னும் நிறைய பாடல்கள் பதிந்துள்ளார் என்று சொன்னார் அதையும் பின் வரும் பதிவுகளில் கேட்கலாம். இவர் அறிமுக காரணமாக இருந்த பாலுஜிக்கு என் மனார்ந்த நன்றி.

முக்கியமான தகவல் என்னவென்றால் இந்த பாடலின் தலைப்பை பாலுஜி பாடுவதற்கு முன் அவரே தலைப்பு வைத்தார் என்று திரு.ராஜ் சார் சொன்னது என்னை மெய் சிலிர்க்க வைத்தது. மேலும் பதிவின் போது அறிய பல தகவல்கள் சொல்லியிருக்கிறார் மேலும் சொல்லுவார் என்று நம்புகிறேன். அவைகளை அடுத்தடுத்த பதிவுகளில் பார்க்கலாம். கிருஷ்னன் மீது பாலுஜி அவர்கள் பாடிய இந்த அழகான பாடலை கேளூங்கள் தங்களின் அபிப்ராயங்களையும், வாழ்த்துக்களையும் அவருக்கு தெரிவியுங்கள். இனி 8 நிமிச பாடலை கேட்போமா?

Rajith www.newyorkraj.com www.saregamusic.com www.msviswanathan.com



ஆல்பம்: கிருஷ்னம் வந்தே ஜகத்குரும்
இசை: திரு.ராஜ், நியுயார்க்
பாடியவர்: எஸ்.பி.பாலு
பாடலாசிரியர்: திரு.உத்திரமேரூர் கோதண்டராமன்
வெளியீடு: சங்கீதா காசேட்
வருடம்: 1996

காலை இளம் கதிரவன் போல்
கண் மலர்வான் மலர் கண்ணன்
திருக்கண்மலர்வான் மலர் கண்ணன்

கருமை நிற கார்முகில் போல்
மழை பொழிவான் மணிவன்னன்
அருள் மழை பொழிவான் மலர்கண்ணன்

காலை இளம் கதிரவன் போல்
கண் மலர்வான் மலர் கண்ணன்
கருமை நிற கார்முகில் போல்
மழை பொழிவான் மணிவன்னன்

பூமேல் ஆடும் வண்டுகளே
இன்னிசை பூபாளம் பாடுங்களே
பூபாளம் கண் அசைந்தாலே
அசையும் பூலோகம் என்றிசையுமே

காலை இளம் கதிரவன் போல்
கண் மலர்வான் மலர் கண்ணன்
திருக்கண்மலர்வான் மலர் கண்ணன்

ஞானபூமியில் உயிர்தரும் ஜீவநாதமா
கோதை நாயகா மறுமுறை கீதை சொல்லுவான்
ஞானபூமியில் உயிர்தரும் ஜீவநாதமா
கோதை நாயகா மறுமுறை கீதை சொல்லுவான்

கதிர் ஒளியாய் துயில் எழுவாய்
குழலிசையாய் வேதமாய்
விழியசையாய் ஜோதியாய்

ஹரிஹரி எனும் திருமந்திரம்
தந்திடும் ரீங்கார சுதியும்

பூமேல் ஆடும் வண்டுகளே
இன்னிசை பூபாளம் பாடுங்களே
பூபாளம் கண் அசைந்தாலே
அசையும் பூலோகம் என்றிசையுமே

காலை இளம் கதிரவன் போல்
கண் மலர்வான் மலர் கண்ணன்
திருக்கண்மலர்வான் மலர் கண்ணன்

சேவல் கூவிட தரிசன ஆவல் மீறிட
கோவில் வாசலில் திருவிளக்கேற்றி பாடினோம்
சேவல் கூவிட தரிசன ஆவல் மீறிட
கோவில் வாசலில் திருவிளக்கேற்றி ஏற்றி பாடினோம்

வைகறையின் வானத்தைப்போல்
மையிருளை நீக்கவே
மெய்பொருளை காணவே
பூவினங்களின் மெல்லியஒலி
சொல்லிடும் சலங்கை ஜதியில்

பூமேல் ஆடும் வண்டுகளே
இன்னிசை பூபாளம் பாடுங்களே
பூபாளம் கண் அசைந்தாலே
அசையும் பூலோகம் என்றிசையுமே

காலை இளம் கதிரவன் போல்
கண் மலர்வான் மலர் கண்ணன்
திருக்கண்மலர்வான் மலர் கண்ணன்

பாத பூஜையில் பரவச பக்தி வேள்வியில்
வாசுதேவனை வணங்கிடும் காலை வேளையில்
பாத பூஜையில் பரவச பக்தி வேள்வியில்
வாசுதேவனை வணங்கிடும் காலை வேளையில்

மானிடர்களே தேவர்களாய்
மாறிடுவோம் பாருங்கள்
மாதவனை பாடுங்கள்

இந்த இந்த நிலை பெறதினமும்
அனைவரின் உறக்கம் கலைந்திட

பூமேல் ஆடும் வண்டுகளே
இன்னிசை பூபாளம் பாடுங்களே
பூபாளம் கண் அசைந்தாலே
அசையும் பூலோகம் என்றிசையுமே

காலை இளம் கதிரவன் போல்
கண் மலர்வான் மலர் கண்ணன்
திருக்கண்மலர்வான் மலர் கண்ணன்

கருமை நிற கார்முகில் போல்
மழை பொழிவான் மணிவன்னன்
அருள் மழை பொழிவான் மணிவன்னன்

பூமேல் ஆடும் வண்டுகளே
இன்னிசை பூபாளம் பாடுங்களே
பூபாளம் கண் அசைந்தாலே
அசையும் பூலோகம் என்றிசையுமே

காலை இளம் கதிரவன் போல்
கண் மலர்வான் மலர் கண்ணன்
திருக்கண்மலர்வான் மலர் கண்ணன்

கருமை நிற கார்முகில் போல்
மழை பொழிவான் மணிவன்னன்
அருள் மழை பொழிவான் மணிவன்னன்

Get this widget | Share | Track details

Monday, September 3, 2007

சிவாஷ்டகம் தமிழில்



பாலு அவர்களின் குரலில் தமிழில் சிவாஷ்டகம், லிங்காஷ்டகம் கேட்டு இறைவன் அருள் பெறுங்கள்.


Get this widget | Share | Track details

நானென்ன கேட்பது நீயென்ன..




பாலு அவர்கள் பாடிய நாராயனன் மீது ஒரு அழகான மெலோடி பக்திப்பாடல் கேட்டு மகிழுங்கள்.


நானென்ன கேட்பது.. நீயென்ன கொடுப்பது
நாராயணா என்ற உன் நாமம் சொன்னப்பின்னே

நானென்ன கேட்பது நீயென்ன கொடுப்பது
நாராயணா என்ற உன் நாமம் சொன்னப்பின்னே

நடப்பதெல்லாம் உன் செயல் என்ற பின்னே
நானென்ன கேட்பது நீயென்ன கொடுப்பது
நடப்பதெல்லாம் உன் செயல் என்ற பின்னே

நானென்ன கேட்பது நீயென்ன கொடுப்பது
நானென்ன கேட்பது நீயென்ன கொடுப்பது
நாராயணா என்ற உன் நாமம் சொன்னப்பின்னே

ஆஆஆஆ...ஆஆஆஆ...ஆஆஆஆ

ஏட்டிலெல்லாம் நின்று எழுத்தாக நீதானே
பாட்டிலெல்லாம் இனிக்கும் இசையாக நீதானே

ஆஆஆஆ...ஆஆஆஆ...ஆஆஆஆ
ஆஆஆஆ...ஆஆஆஆ...ஆஆஆஆ
ஆஆஆஆ...ஆஆஆஆ...ஆஆஆஆ
ஆஆஆஆ...ஆஆஆஆ...ஆஆஆஆ

ஏட்டிலெல்லாம் நின்று எழுத்தாக நீதானே
பாட்டிலெல்லாம் இனிக்கும் இசையாக நீதானே

கூட்டிடும் செல்வமெல்லாம் கொடுப்பது நீதானே
போற்றிடும் புகழெல்லாம் உன் அருள் தானே
கூட்டிடும் செல்வமெல்லாம் கொடுப்பது நீதானே
போற்றிடும் புகழெல்லாம் உன் அருள் தானே

நானென்ன கேட்பது நீயென்ன கொடுப்பது
நாராயணா என்ற உன் நாமம் சொன்னப்பின்னே

ஆஆஆஆ...ஆஆஆஆ...ஆஆஆஆ

அவல் தந்த குசேலனுக்கு அன்பன் நீதானே
அவன் வீட்டில் தஞ்சம் ஒழிந்தவன் நீதானே
அவல் தந்த குசேலனுக்கு அன்பன் நீதானே
அவன் வீட்டில் தஞ்சம் ஒழிந்தவன் நீதானே

கல்லான அகளிகைக்கு கருணை தந்தவன் நீதானே
பொல்லாத சாபம் நீக்கிய ராமன் நீதானே
கல்லான அகளிகைக்கு கருணை தந்தவன் நீதானே
பொல்லாத சாபம் நீக்கிய ராமன் நீதானே

நானென்ன கேட்பது நீயென்ன கொடுப்பது
நாராயணா என்ற உன் நாமம் சொன்னப்பின்னே

ஆஆஆஆ...ஆஆஆஆ...ஆஆஆஆ

வேடனிடம் கடன் கேட்டவன் நீதானே
கும்பிட்டு வருபவரை குபேரராக்குவது நீதானே
வேடனிடம் கடன் கேட்டவன் நீதானே
கும்பிட்டு வருபவரை குபேரராக்குவது நீதானே

ஐந்து தலைநாகத்தின் மேல் ஆடியவன் நீதானே
அடியவருக்கு ஆறுதலை தரும் ஏழுமலையான் நீதானே
ஐந்து தலைநாகத்தின் மேல் ஆடியவன் நீதானே
அடியவருக்கு ஆறுதலை தரும் ஏழுமலையான் நீதானே

நானென்ன கேட்பது நீயென்ன கொடுப்பது
நாராயணா என்ற உன் நாமம் சொன்னப்பின்னே

ஆஆஆஆ...ஆஆஆஆ...ஆஆஆஆ

Get this widget | Share | Track details

ஹைத்ராபாத் சந்திப்பு காட்சிகள்