Thursday, December 30, 2010

எஸ்.பி.பியின் சென்னையில் திருவையாறு 2010



எஸ்.பி.பியின் சென்னையில் திருவையாறு 2010

டாக்டர்.எஸ்.பி.பி அவர்கள் தன் பேட்டிகளில் பல தடவை சொல்லி நான் கேள்விபட்டிருக்கிறேன் அது என்ன? சரியான் முறையில் கர்நாடக கற்றுக்கொண்டு நான் தனிப்பட்ட முறையில் ஒரு கர்நாடக கச்சேரி செய்யவேண்டும் அது எப்போது நடைபெறுகிறதோ? தெரியவில்லை கடவுள் அனுக்கிரகம் வேண்டும் என்று சொல்லி கேள்விப்பட்டிருக்கிறேன். இந்த அறிதான நிகழ்ச்சியை அவரின் அபிமான ரசிகர்கள் ஆவலுடன்
எதிர்பார்த்து கொண்டு இருந்தார்கள். இந்த வருடம் டிசம்பர் மாதத்த்ல் சென்னையில் திடிரென்று ஒரு விளம்பரம் சென்னையில் பிரபலமான லக்‌ஷ்மன் ஸ்ருதி இன்னிசை குழுவினர் சென்னை திருவையாறு என்ற பெயரில் நிகழ்ச்சி நடத்தினார்கள் ஒரு வாரம் நடந்த இந்த நிகழ்ச்சிகளில் இறுதி நாளான 25 டிசம்பர் நாளன்று டாக்டர் எஸ்.பி.பி அவர்களின் நிகழ்ச்சி என்று எதிர்பார்த்து ரசிகர்கள் மகிழ்ச்சியடைந்தார்கள் இதை உறுதி செய்ய
டாக்டர் எஸ்.பி.பி அவர்களிடம் தொடர்பு கொண்டு கேட்டதற்கு அவரே தெரிவித்தது இந்த நிகழ்ச்சி முற்றிலும் கடவுள் பக்தி பாடல்கள் தான் தனியாகவும் திரைப்படப்பாடல்களில் இருந்தும் நான் பாடிய பாடல்கள் பாடுகிறேன் என்று தெரிவித்தார். இந்த செய்தி அவரின் அன்பு ரசிகர்களுக்கு சிறிது ஏமாற்றம் தந்தாலும் என்னையும் சேர்த்துதான் முழு நிகழ்ச்சியும் பக்தி பாடலகள் வழங்குகிறார் என்று தெரிந்து கொண்டு நிகழ்ச்சியை காண
மிகவும் ஆவலுடன் இருந்தார்கள்.

டாக்டர் எஸ்.பி.பி அவர்கள் ரசிகர்களை சிறிதும் ஏமாற்றவில்லை மிகவும் அற்புதமாக பாடி அசத்தினார் நானும் நிகழ்ச்சியை சிறிது நேரம் கேட்டேன் (அப்போது ஊர் திரும்ப வேண்டிய அவசரத்தில் இருந்தேன்) அரங்கத்தில் கூடியிருந்த ரசிகர்கள் அனைவரும் மிகவும் அமைதியுடன் கேட்டு ரசித்தது எனக்கே ஆச்சரியமாக இருந்தது. பொதுவாக அவரின் மெல்லிசை நிகழ்ச்சிகளில் மகிழ்ச்சி குதுகலம குதித்து விளையாடும். 3 பாடல்கள் நடுவில்
டாக்டர் எஸ்.பி.பி அவர்களே ரசிகர்களை பார்த்து என்னங்க நீங்க அமைதியாக இருந்து கேட்பதை பார்த்தால் எனக்கு பயமா இருக்குது நான் நல்லா பாடவில்லயானாலும் கைதட்டுங்கள் என்று வேண்டுகோள் விடுத்தது அவரையும் அடடே எப்பேர்பட்ட மனுசன் என்று நினைத்துகொண்டு எல்லோரும் நிமிர்ந்து உட்கார்ந்து கைதட்டியதை நினைத்தால் எனக்கு இப்போதும் புல்லரிக்குது. அவரின் பிசியான நேரத்திலும் அவரை சந்திக்க நேரம் ஒதுக்கி அழைத்தது கண்டு மெய் சிலிர்த்து போனேன். ரசிகரகளின் மீது அவர் வைத்து இருக்கும் அன்பு அவரின் இனிமையான் குரலை போன்றே அற்புதமானது இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டு கடவுள் மீது பக்தி பாடல்களை மிகவும் அனுபவித்து உருக்கமாகி பாடியதற்காக அவர் என்றென்றும் நீடுழி வாழ எல்லாம் வல்ல இறைவன் அருள் புரிய வேண்டும் என்று இறைவனை வேண்டுகிறேன்.




1.ப்ரோச்சே வாஎவருரா >> 2. ஓம் ஜக >> 3. ஓம் ஓம்கார >> 4.சங்கீத சாகித்ய >> 5.வேதம் அனுவிநாதம் .

குறிப்பு: நிகழ்ச்சியில் அவர் பாடிய பாடல்களில் இருந்து 5 பாடல்கள் மட்டும் என்னால் பதிய முடிந்தது அலைபேசியில் பதியபட்டதால் ஒலிகோப்பின் தரம் சிறிது இல்லையில்லை பெரிதாகவே மோசமாக இருக்கும் ஒரிஜனல் கேட்டு இந்த தொகுப்பை கேட்பதற்க்கு மனதிற்க்கு மிகவும் கஷ்டமாக இருந்தாலும் பாலுஜி அவர்கள் 30 வருடங்களூக்கு முன் பாடிய பாடல்களை எப்படி சிறிதும் குறைவில்லாமல் அப்படியே பாடுகிறார் என்று நினைத்து
ஆச்சரியப்படுத்துகிறார். ஆகையால் அவற்றை நீங்களூம் கேட்க வேண்டாமா? அதற்காக தான் இந்த பக்திதளத்தில் பதிந்தேன். பாடல்களை கேட்டு உங்கள் உணர்வுகளை எழுதுங்கள் உங்கள் கருத்துக்களை அவர் படிக்கவும் வாய்ப்பு இருக்கும்.

Powered by eSnips.com


Song liste at Prog. Thanks to Mrs.Lakshmi Varadhachari,Chennai, (Yahoo Group SPB Fans)& P.Rameshchandra Phani, Hyderabad. (Yahoo Group SPB Fans)

1. Sangeetha Sahithya Samalnkrite - Raga SANKARABHARANAM
2. Omkaaranadaan - Guruji solo from the movie SANKARABHARANAM
3. Shruti NEEVU Gati, Gathi Neeru Lady Solo - in Ragamalika
4. Vedham Anuvilum Oru - Salangai Oli
5. Sivastotram
6. BROCHEVAAREVARURA Song from SANKARABHARANAM
7. NAGAVULU NIJAMANI solo by Gopika Poornima in the raga Kalyani (Annamacharya Krithi)
8. A song in praise of Lord Krishna - Krishna, Janardhana, Gopinandhana, Giridhara, Govardhana - Solo by Ji
9. Annayilum Sirandha Annai Aval, Thandhayilum Sirandha - by Guruji composer Kannadasan
10. Hari Oom - In praise of Tirupathi venkateswara - SPB Ji and group.
11. Solo by Gopika Poornima - Song : GOVINDAASRITA GOKULABRINDA NOT GOVINDA- SRITA- GOKULA..)
12. Iippasiyil Vona Vizhavum - Solo by SPB Ji
13. Nadhiyil Aaadum Poovanam - from Movie Kaadhal Oviyam
14. Lingashtakam - Solo bu guruji
15. Narayanathe Namo namo by Gopika Poornima solo
16. Naadha vinothangal - Slanagai oli
17. Sivamayamaga Therigirathe - Solo by Guruji in praise of Annamalayar
18. aayarpaadi maaligayil
19. Naada Sariraapara)- (Guruji from the movie SANKARABHARANAM

8 comments:

Balu Bakthan said...

He himself a God, sings God's Songs!! Thanks Ravee Uncle!!

Aparna Sriram said...

Thanks Ravee Sir, you made my new year, I am welcoming this year 2011 with these songs. I felt the same, same rendition, as he had done 30 yrs before, it gives us the feeling of hearing the original cassette. Once again thank you so much.

Anonymous said...

Hai Balubakthan How are you? Long back saw ur mail in this site. Any way Happy New year?

Anonymous said...

Dear Aparna.. I warm welcome to this Devo blog. Yes i was decided post this link in this blog only. Please wait one more special radio programme i will post in myspb.blogspot.com coming very soon. Happy New Year Aparna Sriram

Anonymous said...

Thanks Mr Ravee. Wishing you and family a very Happy New Year

Regards,
Thirumal

Anonymous said...

There is no way in this world that SPB can bring a feel of "Bhakti" in his songs or voice.

SPB ஒரு மிகச்சிறந்த பாடகர் என்பதில் எள்ளளவும் ஐயம் இல்லை.
ஆனால்...
எந்த ஒரு பாட்டிலாவது "பக்தி மனம்/ மணம்" கமழ்கிறது என்றால் அது இது வரை நடக்காத காரியம்.

இனி மேலும் அது நடக்க சாத்தியம் இல்லை. தற்சமயம் பாடி வருவது பணத்துக்காக மட்டுமே..

Anonymous said...

அன்புள்ள அனானி அவர்களே வணக்கம்.

//இனி மேலும் அது நடக்க சாத்தியம் இல்லை. தற்சமயம் பாடி வருவது பணத்துக்காக மட்டுமே..//

பாலுஜி மட்டுமல்ல நீங்கள் பிரபலமாக இருந்தாலும் அதைதான் செய்திருப்பீர்கள்.

//ஆனால்...
எந்த ஒரு பாட்டிலாவது "பக்தி மனம்/ மணம்" கமழ்கிறது என்றால் அது இது வரை நடக்காத காரியம். //

உங்கள் ரசனை அப்படி செமி க்ளாசிக்கல் பாடல்களில் சங்கராபரணம் இன்றளவும் மக்களால் ரசிக்கப்படுகிறது இசை நிகழ்ச்சிகளில். இதை நீங்க மறுக்க முடியுமா. அதுமட்டுமல்லாமல் கர்நாடக இசை முழுவதுமாக கற்றுக்கொண்டு பாடியிருந்தால் அவர் இன்னும் புகழ் இமயத்துக்கு மேலெ சென்றுருக்கும் என்பது என் தாழ்மையான கருத்து.

திண்டுக்கல் தனபாலன் said...

அருமை! வாழ்த்துக்கள் சார்!
சிந்திக்க :
"உங்களின் மந்திரச் சொல் என்ன?"

ஹைத்ராபாத் சந்திப்பு காட்சிகள்